சபரிமலை துவாரபாலகர் சிலைகள் எடை குறைவு – கேரள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
![]() |
Sabarimala temple nadai open duvaragabalagar image |
சபரிமலை கோயிலில் துவாரபாலகர் சிலைகளின் தங்க முலாம் பூச்சில் 4.5 கிலோ எடைக் குறைவு ஏற்பட்டது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சன்னதியின் முன் நுழைவாயிலில் துவாரபாலகர் சிலைகள் 1999 ஆம் ஆண்டு பாரம்பரிய முறையில் நிறுவப்பட்டன. அப்போது சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டு, அவை சன்னதியின் புனிதத்தன்மையையும் அழகையும் அதிகரித்தன.
2019 ஆம் ஆண்டு பழைய தகடுகள் அகற்றப்பட்டு, புதிய தங்க முலாம் பூசப்பட்ட செப்புத் தகடுகள் மற்றும் பீடங்கள் பொருத்தப்பட்டன. அப்போது பதிவு செய்யப்பட்ட எடை 42.8 கிலோவாக இருந்த நிலையில், புதிதாக பொருத்தப்பட்ட பின் எடை 38.25 கிலோவாக மட்டுமே இருந்ததுள்ளது இதனால் சிலையின் சராசரி எடையில் 4.54 கிலோ எடைக் குறைவு ஏற்பட்டது.
இந்த குறைவானது எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் அங்கு இல்லாதது, பதிவுகள் முழுமையாக பராமரிக்கப்படாதது, தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் “செப்புத் தகடுகள்” என மட்டுமே பதிவுசெய்யப்பட்டதன் காரணம் ஆகியவற்றில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி ராஜா விஜயராகவன் வி. மற்றும் நீதிபதி கே.வி. ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது. சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் முன் எடையினை சரிபார்க்கப்படாதது ஏன், எடைக் குறைவு குறித்து அதிகாரிகள் எந்தப் பதிவும் செய்யாதது ஏன், சோபானத்தில் சிலைகள் பொருத்தப்பட்டபோது எடை பதிவு செய்யப்படாதது ஏன் போன்ற கேள்விகள் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டன.
மேலும், சென்னையில் தயாரிக்கப்பட்ட தகடுகள் தாமதமாக வந்ததன் காரணமும், ஸ்பான்சரின் முன்னிலையில் மட்டுமே பொருட்கள் அனுப்பப்பட்டதற்கான காரணமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
நீதிமன்றம், “இது சாதாரண அலட்சியம் அல்ல, ஆலய நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையையே கேள்விக்குறியாக்குகிறது” என்று கடுமையாகக் கண்டித்தது.
சபரிமலை நிர்வாக பொறுப்பிலுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தங்க தகடுகள் மற்றும் பீடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணிக்கான ஸ்பான்சர் உன்னிகிருஷ்ணன் பாட்டி ஆவார். அவரது முன்னிலையில் மட்டுமே தகடுகள் சென்னைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேவசம் அதிகாரிகள் நேரடியாகச் சென்றதாக பதிவுகள் இல்லை. அவரின் பங்கு குறித்து தனியாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைகளின் எடைக் குறைவு விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் புனிதத்தன்மையும் நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 30, 2025 அன்று விசாரணைக்கு வரும். அதிகாரிகளின் அலட்சியமும், ஸ்பான்சரின் பங்கும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#Sabarimala #KeralaHighCourt #SabarimalaNews #GoldPlating #TempleNews #KeralaNews #AIyyappaDevotees
Read also : Sabarimala Temple Calander 2025 - 2026
சுருக்கப்பட்ட செய்தி (short news)
சபரிமலை துவாரபாலகர் சிலைகள் எடைக் குறைவு – விசாரணைக்கு உத்தரவு
சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகளில் தங்க முலாம் பூச்சு செய்யப்பட்ட தகடுகளின் எடை 4.54 கிலோ குறைந்ததாக பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிலைகள் 2019 இல் மறுபிரதிஷ்டை செய்யப்படும் போது, 42.8 கிலோ எடையுடன் இருந்த தகடுகள், புது பொருத்தத்தின் பின் 38.25 கிலோவாக மட்டுமே இருந்தது.
இந்த எடைக் குறைவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. பதிவுகள் பராமரிக்கப்படாதது, சென்னையில் தயாரிக்கப்பட்ட தகடுகள் தாமதமாக வந்தது, ஸ்பான்சரின் முன்னிலையில் மட்டுமே பொருட்கள் அனுப்பப்பட்டதன் காரணம் போன்ற அம்சங்களை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஸ்பான்சர் உன்னிகிருஷ்ணன் பாட்டியின் பங்கையும் நீதிமன்றம் தனியாக ஆராய உள்ளது.
இந்த விவகாரம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு மீண்டும் செப்டம்பர் 30, 2025 அன்று விசாரணைக்கு வரும்
Read also : Thaga Thaga Thanga koorai ayyappan song lyrics