வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா | Villali Veeran Ayya Song Lyrics Tamil
⭐ வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் – அறிமுகம்
ஐயப்ப சாமியின் பக்தியையும் பராக்கிரமத்தையும் மனதில் பதியச் செய்யும் மிக ஆற்றல்மிக்க பாடல் தான் “வில்லாளி வீரன் ஐயா”. “சாமி ரொம்ப சிறுசா ஐயா” என்ற வரிகளால் பக்தர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல், மண்டல பூஜை காலங்களில் இருந்து தினசரி பஜனை வரை எங்கும் ஒலிக்கிறது.
அய்யப்பனின் அருள், சாந்தம், வீர சக்தி ஆகியவற்றை எளிமையான சொற்களில் மனமூட்டும் விதமாக இந்த பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த பதிவில், வில்லாளி வீரன் ஐயா பாடலின் முழுமையான தமிழ் வரிகளையும், இறுதியில் காணொளி இணைப்பையும் வழங்கியுள்ளோம்.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
🎵 வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் (Full Lyrics)
எத்தனையோ மலைகள் உண்டு
ஆமாம்….
எங்கெங்கோ கோவில்கள் சென்றதுண்டு
ஆமாம்…
ஆனால் உன்னை போல்
ஒரு தெய்வத்தை உலகில் நான்
கண்டதில்லையே ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
மோகினி பாலன் என்போம்
ஆமாம்…
மோகன ரூபன் என்போம்
ஆமாம்…
வில்லாளி வீரன் என்போம்
ஆமாம்…
வீர மணிகண்டன் என்போம்
ஆமாம்…
பந்தள ராஜன் என்போம்
ஆமாம்…
பம்பா வாசன் என்போம்
ஆமாம்…
கலியுக வரதன் என்போம்
ஆமாம்…
சாந்தமலை வாசன் என்போம்
ஆமாம்…
சத்குரு நாதன் என்போம்
ஆமாம்…
சாந்த ஷரூபன் என்போம்
ஆமாம்…
ஆனந்த சித்தன் என்போம்
ஆமாம்…
ஹரிஹர சுதன் என்போம்
ஆமாம்…
ஈசனுக்கு மகனாம்
ஈடில்லா தெய்வமாம்
குழந்தையாய் இருப்பானாம்
பக்தர் குறையை எல்லாம் தீர்ப்பானாம்
ஏழைக்கு அருள்பவனாம்
நம்ம குல சாமியாம்
அப்படிப்பட்ட
சுவாமி ரொம்ப சிறுசையா
ஆனா சக்தி ரொம்ப பெருசையா
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
அச்சங்கோவில் அரசன் என்போம்
ஆமாம்…
ஆரியங்காவு ஐயன் என்போம்
ஆமாம்…
குளத்துப்புழை பாலன் என்போம்
ஆமாம்…
எருமேலி ஸ்ரீ தர்ம சாஸ்தா என்போம்
ஆமாம்…
சொரிமுத்து அய்யனார் அப்பன் என்போம்
ஆமாம்…
ஜோதிஷரூபன் என்போம்
ஆமாம்…
மகர்ஷி மர்த்தன் என்போம்
ஆமாம்…
மணிகண்ட சுவாமி என்போம்
ஆமாம்…
சுகுணவிலாசன் என்போம்
ஆமாம்…
சுந்தர ரூபன் என்போம்
ஆமாம்…
ஜாதி மத பேதமில்லா கடவுளாம்
சக்திய வடிவான தெய்வமாம்
ஆபத்தில் காப்பவனாம்
அன்னதான பிரபுவாம்
உலகத்தின் ஒப்பற்ற தெய்வமாம்
சோதனைகள் செய்வானாம்
ஆனால் கைவிட மாட்டானாம்
அப்படிப்பட்ட
சுவாமி ரொம்ப சிறுசையா
ஆனா சக்தி ரொம்ப பெருசையா
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
பூலோகநாதன் என்போம்
ஆமாம்…
பூமி பிரபஞ்சன் என்போம்
ஆமாம்…
ராஜாதி ராஜன் என்போம்
ஆமாம்…
ராஜ மணிகண்ட சுவாமி என்போம்
ஆமாம்…
ஸ்ரீ தர்ம சாஸ்தா தெய்வம் என்போம்
ஆமாம்…
தருணி தரகண்டன் என்போம்
ஆமாம்…
பொன்னம்பல வாசன் என்போம்
ஆமாம்…
தேவாதி தேவன் என்போம்
ஆமாம்…
மங்கள மூர்த்தி என்போம்
ஆமாம்…
மகர ஜோதி என்போம்
ஆமாம்…
சகலகலா வல்லவனாம்
சந்தன பிரியனாம்
நெய் அபிஷேக பிரியனாம்
சபரிமலையில் வாழ்பவனாம்
பக்தர் உயிரில் கலந்தவனாம்
பாசமான சுவாமியாம்
அப்படிப்பட்ட
சுவாமி ரொம்ப சிறுசையா
ஆனா சக்தி மட்டும் பெருசையா
வில்லாளி வீரன் ஐயா
வீர மணிகண்டனையா
சாமியே திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
பச்சை புள்ளை பவள புள்ளை
பாண்டுரங்கன் பெத்த புள்ளை
பம்பையிலே பொறந்த புள்ளை
பந்தளத்தில் வளந்த புள்ளை
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமியே… சரணம் ஐயப்பா
கண்ணுமணி பொன்னுமணி
சபரிமலை முத்துமணி
கழுத்தில் உள்ள துளசி மணி
கண்ணே பொன்னே தங்கமணி
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமியே… சரணம் ஐயப்பா
ராஜாதி ராஜனையா
ராஜ மணிகண்டனையா
பூலோக நாதனையா
பூமீர்ப்ப அஞ்சனையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமியே… சரணம் ஐயப்பா
சொரிமுத்து ஐயன் அவன்
சொக்க வைக்கும் பிள்ளை அவன்
ஆண்டி முதல் அரசன் வரை
ஆதரிக்கும் சாமி அவன்
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
சுவாமி ரொம்ப சிறுசையா
சக்தி ரொம்ப பெருசையா
திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமி சாமி திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமியே திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமி சாமி திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமி சாமி திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
சாமியே திந்தகத்தோம்
திந்தகத்தோம் திந்தகத்தோம்
ஐயப்பா திந்தகத்தோம்
சுவாமியே… சரணம் ஐயப்பா
🎬 Video song villali veeranaya ayyappan song
🙏 Conclusion
வீர மணிகண்டனின் மகிமையையும், பக்தர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஆன்மீக உணர்வுகளையும் கொண்ட பாடல் இது.
பஜனை, பூஜை, மண்டல பூஜை எதிலும் இந்த பாடல் சிறப்பாக ஒலிக்கிறது.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

